tamilnadu

img

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு

தமிழகத்தில் வரதட்சணை கொடுமைக்காக தண்டனை காலம் 10ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது. 
கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் தமிழக சட்டப்பேரவை சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த திங்களன்னு  தொடங்கியது. இறுதி நாளான இன்று 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நிர்பயா திட்டத்தின் மூலம் ஏற்கனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரதட்சணை கொடுமைக்கான தண்டனை குறைந்த பட்சம் 7 ஆண்டுகளாக இருந்த நிலையில் 10 ஆண்டுகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலியல் தொழிலுக்கு சிறார்களை விலைக்கு வாங்கினால் குறைந்த பட்சம் 7 ஆண்டு சிறை மற்றும் பெண்களை பின் தொடர்தல் குற்றத்திற்கான தண்டனை 5  ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். அதேபோல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.