சென்னை,அக்..5- பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியா வசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க உரிய நடவ டிக்கை எடுக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும், இயற்கை பேரிடரின் போது ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வும் அவர் வலியுறுத்தினார்.