tamilnadu

போக்குவரத்து பணியாளர் தேர்வுக்கு தனிகொள்கையை வகுக்க உத்தரவு

சென்னை,ஜூலை 13- அரசு போக்குவரத்து கழகங்க ளுக்கு பணியாளர்களை தேர்வு  செய்ய, தனி தேர்வு கொள்கை களை 3 மாதங்களில் வகுக்க தமி ழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த  மாற்றுத் திறனாளி கோவைசாமி என்பவர், ஐடிஐ பிட்டர் படிப்பை முடித்து, போக்குவரத்துக் கழ கத்தில் பயிற்சி பெற்றுள்ள, தனக்கு போக்குவரத்துக் கழ கத்தில் பணி வழங்க உத்தரவிடக்  கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 22 ஆண்டு கள் கடந்தும், இதுவரை தனக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து எந்த கடிதமும் வர வில்லை என்பதால், 248 நாட்கள்  பயிற்சி பெற்ற தனக்கு போக்கு வரத்துக் கழகத்தில் பணி வழங்கும்படி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி  நீதிபதி, போக்குவரத்துக் கழகங்க  ளில் உரிய முறையில் விளம்பரம்  கொடுக்காமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், தேர்வு நடைமுறைகள் ஏதும் இல்லை என்றும் கூறினார். மேலும் அரசு பணியாளர் தேர்வா ணையம் அல்லது வேறு அமைப்  பின் மூலம் எழுத்து தேர்வு நடத்தி  பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து  தமிழக அரசு போக்குவரத்து கழ கத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நடத்துனர்கள், ஓட்டுனர்கள், இளநிலை, உதவி  பொறியாளர்கள் ஆகிய பணி யிடங்களுக்கு தகுதிகள் நிர்ண யித்து தேர்வுகள் மேற்கொள்வ தாகவும், இவர்களின் கல்வி தகுதி,  வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதி களை பரிசீலித்து செயல்முறை  தேர்வு நடத்திய பிறகே பணிக்கு தேர்வு செய்யப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், பி.டி ஆஷா அமர்வு, அரசு பணி நியமனத்தில் வெளிப்  படைத் தன்மை பின்பற்ற வேண்  டும் எனவும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து பணி யாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. போக்குவரத்து துறையில், பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறையை உருவாக்க நீதி மன்றம் உத்தரவிட்டும், அந்த நடைமுறைகளை ஏற்படுத்த எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என கூறிய நீதிபதி கள், போக்குவரத்து துறை பணி யாளர்கள் தேர்விற்கு 3 மாதங்க ளில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என உத்தர விட்டு, வழக்கை முடித்து வைத்த னர். மனுதாரருக்கும் இந்த தேர்வில் கலந்து கொள்ள ஏது வாக வயது வரம்பை தளர்த்தி அனுமதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.