tamilnadu

img

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூன் 26- தமிழ்நாட்டில், அடுத்த இரண்டு நாட்களில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்  புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாகவும், தென்மேற்கு  பருவமழை காரணமாக வும், மழைக்கு வாய்ப்பிருப்ப தாக, வானிலை மையம் கூறி யுள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்  களில் லேசான முதல் மித மானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. தென்  தமிழகத்தில் ஓரிரு இடங்க ளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என் றும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத் தில், அதிகபட்சமாக, கட லூர் மாவட்டம் வேப்பூரில், 6 செ. மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கட லூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில் தலா 3 செ.  மீட்டர் மழையும் பதிவாகி யுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்  படும் என்றும், மாலை அல்  லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.