கிருஷ்ணகிரி, ஆக. 2- 1952இல் கேஆர்பி அணை கட்ட வீட்டு மனைகளையும், விவசாய நிலங்க ளையும் வழங்கிய கொட்டாயூர் பகுதி மக்களுக்கும், கும்பளம், ராமன் தொட்டி பகுதி தலித், பழங்குடி, இருளர், மலை வாழ் மக்களுக்கும் பட்டா கேட்டு சூள கிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் வியாழனன்று துவங்கியது. இதற்கிடையே மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 60 நாட்களுக்குள் அனை வருக்கும் பட்டா வழங்க எழுத்துப் பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாய் அறிவிக்கப்பட்ட சூளகிரி வட்டத்தில் கொட்டாயூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாகவும், கும்பளம் ஊராட்சி ராமன் தொட்டி பகுதியில் 8 கிராம மக்கள் 35 ஆண்டுகளுக்கு மேலாகவும் பட்டா கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டா கேட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சூளகிரி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு மாநில துணைச் செய லாளர் டில்லிபாபு தலைமையில் காத்தி ருப்பு போராட்டம் துவங்கியது. இதில் மாவட்டச் செயலாளர் பிராகாஷ், தலை வர் கோதண்டராமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, முன்னாள் மாவட்டத் தலைவர் திராடி சி.முனுசாமி, வட்டச் செயலாளர் முனியப்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வட்டாட்சியருடன் நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் மாவட்ட வருவாய் அலுவலருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் 60 நாட்களுக்குள் பட்டா வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.