tamilnadu

img

வடசென்னை மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் கலாநிதி வீராசாமி

சென்னை, மார்ச் 24- வட சென்னை மக்களவைத் தொகுதியில்  இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பா ளர் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார்.  

இதையொட்டி சென்னை வட கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது..

இதில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் சி.தசரதன், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் ஏ.நாராயணன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.திரவியம், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, விசிக மாவட்டச் செயலாளர் பா.இளங்கோவன், மதிமுக மாவட்டச் செயலாளர் டி.சி.ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பி.சம்சுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.எம்.எஸ்.அப்துல்சமது உள்ளிட்ட  கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பேசினர்.

பணிகள் தொடர்  வாக்களிப்பீர் உதய சூரியன்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகையில், கலாநிதி வீராசாமி கடந்த முறை வெற்றி பெற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டுள் ளார். மீண்டும் அவர் வெற்றி பெற்றால்தான் அந்த பணிகள் தொய்வில்லாமல் தொடரும்.  திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் தான் அதிக வாக்குகள் பெற்றார் என்ற நிலையை உருவாக்கும் வகையில் களப்பணி யாற்றுவோம் என்றார்.

முன்னதாக மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு வரவேற்றார். 10ஆவது வட்டச்  செயலாளர் எஸ்.தமிழ்செல்வன் நன்றி கூறினார். இதில் திமுக பகுதிச் செயலாளர் கள் வை.ம.அருள்தாசன், ஏ.வி.ஆறுமுகம், சிபிஎம் பகுதி செயலாளர்கள் எஸ்.கதிர் வேல், டி.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.