தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புதிய தலைவர்
சென்னை,டிச.24- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தார். அதன்பிறகு தெலுங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அங்கிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி. ராமசுப்பிரமணியன், கடந்த ஆண்டு ஜூனில் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் மறைவு
சென்னை,டிச.24- காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கக்கன், இவரது மகன் பாக்கியநாதன் காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவச் செலவுக்கு உதவும்படி, பாக்கியநாதனின் மனைவி சரோஜினி தேவி முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மருத்துவமனையில் கட்டண வார்டுக்கு மாற்றப்பட்ட பாக்கியநாதனுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டன. சில மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், சென்னை வியாசர்பாடியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இரவு வீட்டிலேயே பாக்கியநாதன் காலமானார். கக்கனின் சகோதரர் மகளும் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவருமான இமையா கக்கன் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
பள்ளிகளில் பாத பூஜை நிகழ்வு கூடாது
புதுக்கோட்டை,டிச.24- பள்ளிகளில் ஆசிரியர் கள், பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வும் மேற்கொள்ளக் கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பெற்றோர் களுக்கு பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும் என்று புகார் மனு பெறப்பட்டது.இதையடுத்து இந்நிகழ்வு கூடாது என்று அறிவுறுத்தி அனைத்து தனி யார் பள்ளிகளுக்கும் சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பாப்கார்ன் மீதான வரி விதிப்புக்கு அதிமுக கண்டனம்
சென்னை,டிச.24- ஒன்றிய பாஜக அரசு, பாப்கார்னுக்கு 3 விதமான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் பட்டதற்கு அதிமுக கண்ட னம் தெரிவித்துள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்தில் பாப்கார்னுக்கு 3 விதமான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு வணிகர்கள், அர சியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்ட னம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாப்கார்னு க்கு 3 விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பது கண்டனத்துக்குரி யது என்று அதிமுக முன் னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏழை எளிய மக்கள் பாப்கார்னை விரும்புகின்றனர். குழந்தை கள் வாங்கி சாப்பிடுகின்ற னர். ஜிஎஸ்டி மூலம் அபரிமித மான வருவாய் வருவதாக சொல்கிறார்கள். ஆனா லும் பாப்கார்னுக்கு வரி விதிப்பதை கண்டிக்கி றோம்” என்று தெரிவித்துள் ளார்.
ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கைக்கு மேலும் நிதி ஒதுக்கீடு
சென்னை,டிச.24- அமெரிக்காவின் ஹூஸ்டன் பல் கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி தமிழக அரசு நிதி வழங்கியுள்ளது. அமெரிக் காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.3 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 750 வழங்கியிருந்தது. இதனையடுத்து, மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதை கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் ஒரு கோடியே ஐம் பது லட்சம் நிதியுதவியாக வழங்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்து அதற்கான அறிக்கையையும் வெளி யிட்டுள்ளது.
“பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாகத் தொடர்ந்து வரும் தமிழர் களின் வர்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை சிறப்பான பங்காற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன். கடல் கடந்தும் தமிழால் இணைந்து வாழ்ந்து வரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங் களுக்கு என் இனிய நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.