tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிறுகடை விற்பானையாளர்கள் சங்கத்தின் புதிய கிளை

சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பானையாளர்கள் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா மாதவரம் பால்பண்ணை அருள்நகர் அணுகுசாலையில் தலைவர் கே.சி.ஏ.கருத்திருமன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் சங்கக் கொடியை ஏற்றினார். வியாபாரிகள் சங்க செயலாளர் டி.வெங்கட் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் விற்பனைக்குழு உறுப்பினர் ஜி.மோனிஷா, வியாபாரிகள் சங்க தலைவர் வி.கமலநாதன், சட்ட ஆலோசகர் வீ.ஆனந்தன், செயலாளர் ஏ.ராஜன், பொருளாளர் லோ.ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

துணிக்கடையில் தீ

சென்னை, மே 12- சென்னை தி.நகர் ரங்க நாதன் தெருவில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் கரும்புகை யாக காட்சி அளித்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீ அணைப்பு படையினர்  தீயை அணைத்தனர். அருகில் உள்ள கடை களுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளி யாகி உள்ளது.

வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து வருகிறது

சென்னை,மே 12- மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது கடுமையான வெயில் கொளுத்துகிறது. கோடை வெயில் தாக்கத்தால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து வருகிறது.  ஏரியின் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கன அடியில் தற்போது நீர் மட்டம் படிப்படியாக குறைந்து 600 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இருப்பில் உள்ள தண்ணீரை ஒரு மாதம் வரை மட்டுமே சென்னைக்கு அனுப்ப முடியும். அதே வேளையில் மேட்டூரில் 108அடி தண்ணீர் இருப்பு உள்ளதால் வழக்கம் போல் ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தன.

பேருந்து மோதி  பெண் பலி

சென்னை, மே 12- சென்னை பூவிருந்த வல்லி அருகே அரசு பேருந்து மோதியதில் காரில் சென்ற பெண் உயிரிழந்தார். மேலும் உடன் சென்ற தோழி காயம் அடைந்துள்ளார். சென்னீர்குப்பம் அருகே வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து காரின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பியூலா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். குளோரி மேல்சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைக்கப்  பட்டுள்ளார்.

சென்னையில் 4 வார்டுக்கு இடைத்தேர்தல்

 சென்னை,மே 12- சென்னை மாநகராட்சி யில் காலியாக உள்ள 4 வார்டுகளுக்கு விரை வில் இடைத்தேர்தல் நடை பெற உள்ளது.  சென்னை மாநக ராட்சியில் ராயபுரம் மண்ட லத்தில் 59வது வார்டு, தேனாம்பேட்டை மண்ட லம் 122வது வார்டு, வளசர வாக்கம் மண்டலம் 146வது வார்டு, ஆலந்தூர் மண்டலம் 165வது வார்டு ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மறைவையொட்டி, அந்த 4 வார்டுகளும் காலியான தாக மாநகராட்சி அறி வித்துள்ளது.

இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் சரண்

சென்னை, மே 12- சென்னை தரமணியில் முன் பகையின் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் சரணடைந்தனர். தரமணி எம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்த வர் அஸ்வின் (25). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அஸ்வின் தனது வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு ஆட்டோவில் வந்த சில நபர்கள், அஸ்வினை தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று அங்கு மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் அந்த நபர்கள், அஸ்வினிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றவே அந்த நபர்கள், அஸ்வினை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.  இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். தகவலறிந்த தரமணி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அஸ்வின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக  வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசா ரணையில், தரமணி அகஸ்தியர் தெருவைச் சேர்ந்த கே.மோகன சுந்தரம் (26), தரமணி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த கு.பரத் ராஜ் (19), தரமணி வஉசி தெருவைச் சேர்ந்த பா.சங்கர் (23) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து 3 பேரையும் காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் 3 பேரும் தரமணி காவல் நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை சரணடைந்தனர். மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த அஸ்வினுக்கும், கைது செய்யப்பட்ட பரத்ராஜ், சங்கருக்கும் இடையே ஒரு ஆண்டுக்கு  முன்பு ஒரு இறப்பு வீட்டில் தகராறு ஏற்பட்டதும், அப்போது அஸ்வின் பரத்ராஜ், சங்கர் ஆகிய 2 பேரையும் தாக்கியதும், பின்னர் அவ்வபோது அஸ்வின், பரத்ராஜ், சங்கர் ஆகிய 2 பேரையும் நேரில் பார்க்கும்போது மிரட்டி வந்ததும், இதன் காரணமாக அஸ்வின் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மாட்டுவண்டி பந்தயம்: இருவர் மீது வழக்கு

சென்னை, மே 12-  சென்னை எம்கேபி நகர் காவல் நிலை யத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகே ஞாயிறன்று  காலை 6 மணி அளவில் 2 பேர் தனித்தனியாக அதிவேக மாக மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக சென்றனர். அப்போது ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அர்ஜூன், அதனை பார்த்து அவர்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்த போது இருவரும் மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருந்து வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி வரை, விதிமீறி மாட்டு வண்டி பந்தயத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த திலீப் (19), அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.