tamilnadu

img

கைப்பேசியும் ஒரு போதை பொருள்தான்!

கைப்பேசியும் ஒரு போதை பொருள்தான்! 

அளவோடு பயன்படுத்த குழந்தைகளுக்கு அறிவுத்தல்

காஞ்சிபுரம், ஜூன் 1-  தமிழ்நாடு பாலர் சங்கத்தின் நான்காம் ஆண்டு விழா (ஜூன் 1) ஞாயிறன்று  காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எம்.சங்கர்கணேஷ், 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாண வர்களுக்கு நோட்டு-புத்தகம் மற்றும் எழுதுப் பொருட்களை வழங்கி "பதின் பருவம் - மாற்றம் எதிர் கொள்வது எப்படி மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு" என்னும் தலைப்பில் பேசினார். அவர்தம் உரையில்,“பள்ளி மாண வர்கள் கைபேசிகளை அதிகமாக உப யோகிப்பது சாதாரணமாகி விட்டது. அதிகாலையில் எழுந்தவுடன் பல் தேய்க்கறோமோ இல்லையோ கைபேசியை தேய்ப்பது என்பது பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. நல்ல விஷயங்களை மட்டும் கைபேசியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.கெட்ட விஷயங்களுக் காக கைபேசிகளை பயன்படுத்தினால் உங்களின் நேரம், ஆரோக்கியமும் கெட்டுவிடும்.  இதுவும் ஒரு போதை தான். பள்ளி மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தயங்காமல் பெற்றோர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ சொல்லி விட வேண்டும். இதில் தயக்கம் காட்டக்கூடாது”என்றார். இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் வி.சிவப்பிர காசம் தலைமை வகிக்க, சங்க நிர்வாகி எம்.சங்கர் வரவேற்க விதொச மாவட்ட அமைப்பாளர் சி. சங்கர், தினமணி நாளேடு மாவட்ட நிருபர் சி.வ.சு.ஜெகஜோதி, கைத்தறி சங்க நிர்வாகிகள் ஜி.வசந்தா, ஜி.எஸ்.வெங்கடேசன்,  வெ.லெனின் ஜி.பிரேம் (அரசு ஊழியர் சங்கம்),  வாலிபர் சங்கம் மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்திக், டி.கோகுல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஏங்கல்ஸ், இ.சங்கர் (ததீஒமு), எ.லட்சமணன், வி.வேலு, பி.செண்பகம். ஏ.ஜெனிட்டன் (சிஐடியு), கோ.வேலா யுதம் (அறிவியல் இயக்கம்), வி.ஹரிகிருஷ்ணன், ஓம் குமார் (மாற்றுத்திறனாளி சங்கம்), சீனி வாசன் (மலைவாழ் மக்கள் சங்கம்)  ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சி.மகேந்திரன் நன்றி கூறினார்.