tamilnadu

img

நீர்த்தேக்க திட்டத்தில் ஊழியர்களுக்கு ஒதுக்கும் அரசு பணத்தில் முறைகேடு

நீர்த்தேக்க திட்டத்தில் ஊழியர்களுக்கு  ஒதுக்கும் அரசு பணத்தில்  முறைகேடு

திருவள்ளூர், ஜூன் 27- கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தில் ஊழியர்க ளுக்கு ஒதுக்கும் அரசு பணத்தில்  முறை கேட்டில் ஈடுபட்டு வருபவர்கள் மீது,  உயர் அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கண்ணன்கோட்டை,  தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டம் 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் அலுவலகம் தனி வட்டாட்சியர் தலை மையில்   கவரைபேட்டையில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நீர்தேக்க திட்ட நில எடுப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில்,  அவ்வலுவலகத்தில் பணிகள் ஏதுமில்லா நிலையில்,  நில அளவையர் முதல் அலுவலக உதவியாளர் வரை 13 நபர்க ளுக்கு  ஊதியத்திற்காக  மாதம்தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது 7 நபர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. பணி முடிந்து 3 ஆண்டு கடந்த பின்னர்  அரசு  முழு நிதியும் ஒதுக்கி வருகிறது. பணி யில் இல்லாத நபர்களுக்கும் சேர்த்து வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறதாம். தற்போது பணியில் உள்ள ஒரு சில அதிகாரிகள் வங்கிக்கு வரும் பணத்தை முறைகேடாக அந்த பணத்தை பங்கு போட்டு எடுத்துக் கொள்வதாக கூறுப்படுகிறது. இந்த முறைகேடுகள் எத்தனை ஆண்டுகளாக நடைபெறுகிறது என்பதனை,  அலுவலக தணிக்கை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க, அரசின் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்,  மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.