tamilnadu

10 சதவிகிதம் இடஒதுக்கீடு ஆணையம் அமைத்து பரிந்துரை அடிப்படையில் முடிவெடுத்திடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

சென்னை, நவ.8- தமிழகத்தில் இதுவரை இடஒதுக் கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையத்தை அமைத்து அதன் பரிந்து ரைகள் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநி லச் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயற்குழு கூட்டம் செவ்வா யன்று (நவ.8) சென்னையில் மாநிலச்  செயற்குழு உறுப்பினர் என்.குணசேக ரன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிர காஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம் பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொதுப்  பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகித  இட ஒதுக்கீடு வழங்கிடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத்  திருத்தம் ஏற்புடையதே என்று உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த மூன்று நீதிபதிகளும், ஏற்க இயலாது என இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை நீதி பதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படை யில் மேற்கண்ட சட்டத்திருத்தம் செல் லத்தக்கது. பொருளாதார அடிப்படையில் நலி வுற்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு ஏற்புடையதா? இல்லையா? என்ற வழக்  கில் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள  இரண்டு நீதிபதிகள் கூட பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கு வது அரசியல் சாசனத்திற்கு முரணா னது அல்ல என்றே தெரிவித்துள்ளனர். அதேசமயம், வேறு விசயங்களில் மாறு பட்ட கருத்துக்களையும் தெரிவித்துள் ளனர்.

வருமான வரம்பை  குறைக்க வேண்டும்

பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பிரிவினருக்கு குறிப்பிட்ட சத விகிதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டத்  திருத்தத்தினை நிறைவேற்ற வேண்டு மென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரி வந்துள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது அத்திருத்தத்தை கட்சி ஆதரித்தது.  ஆனால், அதே நேரத்தில் இச்  சலுகை பெறுவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ள ரூ.8 லட்சம் ஆண்டு வரு மான வரம்பு என்பதை குறைத்து தீர்மா னிக்க வேண்டுமென அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்த மாக வலியுறுத்தியது. வருமான வரம்பு  குறைக்கப்பட வேண்டும் என இப்போ தும் வலியுறுத்துகிறோம்.

அதீத ஒதுக்கீடு

இச்சட்டத்திருத்தத்தை தமிழகத் தில் அமலாக்கும் போது கீழ்க்கண்ட அம்சங்களை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென வற்புறுத்து கிறோம். அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16க்கு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி பொருளாதா ரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை (Subject to a  maximum of 10 percent) இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட் டுள்ளது. எனினும், நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட  ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கட்டா யப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகா ரப்பூர்வமற்ற தகவலின்படி ஏறக் குறைய 95 சதவிகிதமான மக்கள் இட ஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம்  மக்களுக்கு மட்டுமே சாதி அடிப்படை யிலான இடஒதுக்கீடு இல்லை என  விபரங்கள் தெரிவிக்கிறது. இவர் களுக்கு 10 சதவிகிதமான இட ஒதுக்கீடு  வழங்குவது என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் இதுவரை  இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவி னரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்வதற்கான ஒரு ஆணையத்தை அமைத்து அதன் பரிந்துரைகள் அடிப்ப டையில் முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.