tamilnadu

சென்னை ,ஆலந்தூர் முக்கிய செய்திகள்

தோழர் பால்வண்ணம் மனைவி உடல் அடக்கம்

சென்னை, ஜூலை 9 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பால்வண்ணத்தின் மனைவி காந்திமதி உடல் செவ்வாயன்று (ஜூலை 9) தகனம் செய்யப்பட்டது. காந்திமதி திங்களன்று (ஜூலை 8) காலமானார். அவருக்கு வயது 68. பள்ளிக்கரணை வரதராஜபுரத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ஜி.வீரா, தமுஎகச மாநில நிர்வாகிகள் இரா.தெ.முத்து, சைதை ஜெ. மயிலைபாலு, தென்சென்னை மாவட்டத் தலைவர்  சி.எம்.குமார், செயலாளர் வெ.இரவீந்திரபாரதி, பொருளா ளர் கமலக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாமிதா,  மலர்விழி, ஃபெபி மாநிலச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

காலமானார்

 சென்னை, ஜூலை 9-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர் பகுதி எஸ்ஏ காலனி கிளைச் செயலாளர்  எம்.சுந்தரய்யாவின் துணை வியார் திங்களன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 42. வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி முதல் குறுக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன், பெரம்பூர் பகுதிச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர். செவ்வாயன்று காலை பிபி சாலையில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.   சென்னை-  கொல்கத்தா சென்ற

சென்னை-  கொல்கத்தா சென்ற விமானத்தில் முதியவர் மரணம்

ஆலந்தூர், ஜூலை 9-  மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சதாசிவ் (76). உடல்நலம் சரியில்லாத இவர் கடந்த 4-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த அவர் திங்களன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விமானம் உடனடியாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது.  விமானநிலைய காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.