tamilnadu

சென்னை, கோவை முக்கிய செய்திகள்

புதிய விமான சேவை அறிமுகம்
சென்னை, ஆக.11 - பெங்களூரு-மியூனிக் வழித்தடத்தில் புதிய விமானத்தை அறிமுகப்படுத்துவதாக லுஃப்தான்சா அறிவித்துள்ளது. புதிய விமானம் பெங்களூரு கெம்பேக வுடா சர்வதேச விமான நிலையத்தி லிருந்து வாரத்திற்கு ஐந்து முறை இயக்கப்படும். விமானசேவை அடுத்தாண்டு மார்ச் 31 அன்று மியூனிக்கில் இருந்து தொடங்குகிறது.  கால அட்டவணை விவரங்கள் (அனைத்தும் உள்ளூர் நேரப்படி): பெங்களூரு - மியூனிக் வரை, விமான எண் - எல்எச் 765. அதிகாலை 1.45 க்கு புறப்பட்டு இரவு 7:30ம ணிக்கு சென்றடையும். திங்கள், புதன்,வெள்ளி,சனி, ஞாயிறு நாட்க ளில் இயக்கப்படும். அதுபோல, மியூனிக்கில் இருந்து பெங்களூ ருக்கு எல்.எச் 764 என்ற விமானம் செவ்வாய்,வியாழன்,வெள்ளி,சனி,ஞாயிறு நாட்களில் நாள்தோறும் காலை 11:55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவில் 12.05க்கு வந்தடையும் என்று லுஃப்தான்சா குழும மூத்த இயக்குநர் ஜார்ஜ் எட்டியேல் கூறியுள்ளார். இந்த விமானத்தால் சென்னை யில் இருந்து ஜெர்மனி செல்லும் பயணிகள் மற்றும் மேற்படிப்புக்காக செல்லும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

அழிந்து வரும் ஆமை இனம் 

கோவை, ஆக.11- கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் அமைந்துள்ள குளக்கரையில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறன்று கியூப் அமைப்பச்சேர்ந்த தன்னார்வலர்கள் எறும்பு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்நிலையில், தன்னார்வலர் சதீஸ் என்பவர் அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த போது பால் ஆமை தென்பட்டுள்ளது. இதுகுறித்து கியூப் அமைப்பினர் கூறியதாவது: வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பட்டியல் 1ல் பால் ஆமை உள்ளது. புலி மற்றும் யானை பாதுகாக்கப்படுவதை போல் இந்த ஆமையும் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதால் பட்டியல் 1ல் இணைக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில் அதிகம் தென்படாத மற்றும் நன்னீரில் வாழும் இவ்வகை ஆமை சிங்காநல்லூர் குளத்தில் தென்பட்டுள்ளது. இவ்வகை ஆமைகளை பாதுகாக்கவும், குளத்தின் இயற்கை சூழல் அமைப்பை மேம்படுத்தவும் வனத்துறை மற்றும் கோவை மாநகராட்சி முன்வர வேண்டும் என்றார்.

சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை 
சென்னை,ஆக.11-ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் விதிகள்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடை களுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் விதி கள்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக்), பார்கள், கிளப்பு கள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டி ப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம்  மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.