tamilnadu

img

வாசிப்பை அதிகாரிக்கும் உள்ளூர் புத்தக காட்சிகள் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜூன் 15 - வாசிப்பை அதிகரிக்கும் நோக்கோடு உள்ளூர் அளவில் புத்தக் காட்சிகள் நடத்துவது பரவலாக வேண்டும் என்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் புத்தகக் காட்சி நடத்துவது இயக்கமாக மாறியிருக்கிறது. மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி நடத்துவதுமாறி  சென்னையில் முதல் முறையாக உள்ளூர் அளவில் ஓஎம்ஆர் புத்தகக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது.  பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், யுனைட், சாய்நகர் மக்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த புத்தகக்காட்சி பெருங்குடி சுங்கச்சாவடி அருகே  ஜூன் 19வரை நடைபெறுகிறது. புத்தகக் காட்சியை திறந்து வைத்து ஒடிசா மாநில முதல்வரின் ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன்  பேசுகையில், இந்தியவிலேயே முதல்முறையாக 1948ம ஆண்டு பொதுநூலகச் சட்டத்தை கொண்டு வந்த மாநிலம் தமிழகம். பிற மாநிலங்களில் மாவட்ட அளவில் புத்தகக்காட்சி நடத்துவது என்பது இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் உள்ளூர் அளவில் புத்தக்காட்சி நடத்தும் அளவிற்கு தமிழகம் வளர்ந்துள்ளது. புத்தகத்தை வீட்டிற்கு, வாசகனுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் இந்த புத்தக் காட்சி நடத்தப்படுகிறது என்றார். தொலைக்காட்சி, இணையத்தால் வாசிப்பு குறையவில்லை. அவை வாசிப்புக்கான தூண்டுதலாகவே உள்ளன. புத்தகக் காட்சிகள் பரவலாக நடைபெறுவது இதனை உறுதி படுத்துகின்றன. குழந்தைகளையும், சிறுவர்களையும் வாசிப்பு பழக்கத்திற்கு உட்படுத்த வேண்டும். அதற்கு இத்தகைய புத்தக் காட்சிகள் உதவும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சோழிங்கநல்லூர் கிளைத் தலைவர் எஸ்.சுகுமார் தலைமை தாங்கினார். விற்பனையை பேரா. வீ. அரசு தொடங்கி வைத்தார். பாரதி புத்தகாலய முதன்மை மேலாளர் க.நாகராஜன், சாய்நகர் மக்கள் சங்க செயலாளர் வி.பார்த்திபன், கந்தன்சாவடி-பெருங்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் இ.சண்முகம், ஓஎம்ஆர் குறுந் தொழில்கள் சங்கத் தலைவர் எஸ். ஜெயபிரகாசன், யுனைட் பொதுச் செயலாளர் வெல்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.