tamilnadu

img

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிக்சை

காஞ்சிபுரம், ஜூலை 2- காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக வெற்றிகர மாக செய்யப்பட்டுள்ளது.  எஸ்.ஆர்.எம் மருத்துவ சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஏழை எளியவர்களுக்கும் தரமான  மருத்துவ சுகாதார சேவை செய்து வருகிறது. போதை பழக்கத்தினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபருக்கு  தானம் பெற்று  எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் குளோபல் மருத்துவமனையு டன் இணைந்து  சுமார்  6 மணி நேரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகர மாக முடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.ஆர்.எம் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் ராம் நடேசன் கூறியதாவது:- எஸ். ஆர். எம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  சென்னை குளோபல் மருத்துவமனையுடன் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் சிறுநீரகம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு செய்யப்பட்டு வருகின்றன. இப்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இத்தகைய மாற்று அறுவை சிகிச்சைகளை நோயாளி கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.