கடலூர், நவ.15- கடலூரில் நகராட்சிப்பகுதி மற்றும் நகரை யொட்டியுள்ள ஊராட்சியான கோண்டூர், சாவடி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பன்றி களை முறையாக பட்டியில் அடைத்து பரா மரிக்காமல் திறந்து விடுவதால் அவைகள் நகர்புறத்திலுள்ள வடிகால் சாக்கடைகளில் சுற்றித் திறிகின்றன. இதனால், பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் வரப்பெறுகின்றன. சாலைகளில் சுற்றித் திரிவ தால் அடிக்கடி வாகன விபத்துகள்ஏற்படுவ தாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வரு கின்றனர். நகருக்குள்ளும் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வரு கிறது. இதுதொடர்பாக, கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார்கள் அனுப்பப்பட்டது. இதன் விளைவாக பன்றி களை பிடிக்க 2018 ஆம் ஆண்டில் வட்டார வளரச்சி அலுவலரால் உத்தரவிடப்பட்டன. அதன் ஒருபகுதியாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு குறிஞ்சி நகர் பகுதியில் பன்றியை பிடிக்கும் அமைப்பினர் பன்றிகளை பிடித்துள்ளனர். இதற்கு பன்றி வளர்ப்போர் எதிர்ப்புத் தெரி வித்து பிரச்சனை செய்துள்ளனர். பன்றி பிடிக்க வந்தோர் மீது தாக்குதலும் நடத்தி யுள்ளனர். வாகனத்தையும் சேதப்படுத்தி யுள்ளதாகக் கூறப்படுகிறது. கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, நகருக்குள் பன்றிகள் வரக்கூடாதென தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால், மாறுநாளில் மா.பழனிவேல் வளர்த்து வந்த பன்றிகளில் 3 பன்றிகள் இறந்த நிலையிலும் கிடந்ததாம். இதற்கு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் தான் கார ணம் என்று பழனிவேல் இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து குடியி ருப்போர் நலச்சங்கத் தலைவர் பி.வெங்க டேசனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். இந்நிலையில், இத்தகவலறிந்த சங்கத்தி னர் ஏராளமானவர்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையம் முன்பாக திரண்டனர். புகார் அளித்த தற்காக சங்க நிர்வாகி மீது குற்றம்சாட்டக் கூடாது என்று தெரிவித்தனர். இருதரப்பின ரையும் அழைத்து காவல் ஆய்வாளர் கி.உதய குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், உரிய உடன்பாடு எட்டப்படவில்லை. பொய் புகாரை திரும்பப் பெற வேண்டும், நகர் பகுதி, ஊராட்சி பகுதிகளில் சுற்றித் திரிந்து நோய்களை ஏற்படுத்தும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தி அடுத்தக் கட்ட போராட்டங்களை தீவிரமாக நடத்துவதென சுமார் 140 குடியிருப்போர் நலச்சங்கங்கள் முடிவெடுத்துள்ளதால், பன்றி பிரச்சனை கடலூரில் புதியதாக விஸ்வ ரூபம் எடுத்துள்ளது. பொது பிரச்சனைகளில் குடியிருப்போர் சங்கம் தலையிடுவதை முடக்கும் விதமாக இது போன்ற புகார்கள் கொடுக்கப்பட்டு வருவதாக சங்க நிர்வாகி கள் தெரிவித்தனர்.