சென்னை, அக்.5- “உயிர்களிடத்து வேற்று மையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறி யைப்போற்றுவோம்” என ‘வள்ளலார்’ ராமலிங்க அடி கள் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவ ரும், பசிப்பிணி போக்க பாடுபட்டவருமான ‘வள்ளலார்’ இராமலிங்க அடிகள் பிறந்த தினம் அக்டோபர் 5 கொண்டாடப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5, ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் தனது எக்ஸ் தளத்தில், “நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு முதலாக, “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கொண்டாடி வரும் அருட்பிர காச வள்ளலாரின் பிறந்தநாள். “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!” “மதமான பேய் பிடி யாதிருக்க வேண்டும்!” என அவர் காட்டிய சம ரச சுத்தவழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ் வும் காணாத சமத்துவ நெறியைப் போற்று வோம்! வாழ்க வள்ளலார்!” எனப் பதிவிட்டுள்ளார்.