மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் எஸ்.ராஜசேகரன் உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சிபிஎம் தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, திருத்துறைப்பூண்டி தொகுதி சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, முன்னாள் அமைச்சர் டாக்டர் க.சந்திரசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் த.புஷ்பராஜ், உலகநாதன், திருஞானசம்பந்தம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிபிஐ தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, திருவரங்குளம் ஒன்றியப் பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஞான.இளங்கோவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அண்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், இடதுசாரிக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.