tamilnadu

img

ஆங்கிலப்புத்தாண்டு: மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை,டிச.31- உலகம் முழுவதும் திங்கட்கிழமை (ஜன.1) ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள னர்.

முதல்வர் ஸ்டாலின்: புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக் கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. பெரியார், அண்ணா, கருணா நிதி வழியில், சமத்துவம், சகோதரத்து வம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னே றும் நமது அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பி க்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. “எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது லட்சியம்  நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:  மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள்விலகி  இன்பங்கள் பெருகவும்; அனைவரது  வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சி யையும், நோய் இல்லாத வாழ்வை யும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக  அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரா ர்த்தித்து, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழி யில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு  நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: பாஜக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களில் இருந்து விடுவிக்க தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முதல்கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தின் மூலம் பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து இண்டியா  கூட்டணியை அமைத்திருக்கின்றன. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மீண்டும் பாரத நியாய யாத்திரையை ஜனவரி 14 ஆம் தேதி ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20 அன்று மும்பையில் நிறைவு செய்கிறார். இந்த நடைபயணத்தின் மூலம் பாஜக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின் தொடக்கமாக வருகிற ஆங்கில புத்தாண்டு அமைய இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்;

2024 ஆம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு வலது பக்கம் திருப்பப்பட்ட, அரசியல், சமூக, பொருளாதார திசை வழி, மீண்டும் ஜனநாயக மைய நீரோட்டத்திற்கு திருப்பப்படும் ஆண்டாக அமைய வேண்டும் என விழை கிறோம்.

ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி கோட்பாடு நிராகரிக்கப்பட்டு, அதிகார குவிப்புக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. இதன் வழி மாநில உரிமைகள் முற்றாக பறிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயக வாழ்வு நெருக்கடியின் விளிம்புக்கு தள்ளப்பட் டுள்ளது.

இந்த சூழலில் நாட்டின்  ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும் ‘இண்டியா’  கூட்டணி  வகுப்புவாத இருள் நீக்கும் நம்பிக்கை ஒளிச் சுடராக எழுந்து வருகிறது. இது  2024 ஆம் ஆண்டில் அதிகாரத்தை கைப்பற்றி, நாட்டின் மதச்சார்பற்ற மாண்பையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மரபையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு வரும்  2024 - ஆங்கில புத்தாண்டில் இந்தியக் கம்யூனிஸ்டு  கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்துவிட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024 ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனை வருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக் கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதி யும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: விவசாயிகளையும், சிறு குறு நிறுவனங்களையும், தமிழக மீனவர்களையும் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் மத்தியில் ஒன்றிய அரசை இண்டியா கூட்டணி அமைக்கும் என்ற நிலையை உருவாக்க நம்மை நாம்  ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான உறுதி எடுத்துக்கொண்டு, இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்; கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம்; மதச்சார்பின்மையைக் காப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சி களால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக புத்தாண்டை ஆக்குவோம்.  புதுப்பொலிவை, புதுவளர்ச்சியை, புதுச் சவால்களை,புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மேலும்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே,வாசன், உள்பட பலரும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.