தனிமனித இடைவெளி, முகக்கவசத்தோடு நீதி மன்றங்களை நடத்திட வேண்டும் பார் கவுன்சிலுக்கு 100 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும், 3 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஆக.5) தமிழகம் முழுவதும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக வடமாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.