தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிட்ட அறி விப்புகள் வருமாறு:
கடந்த காலங்க ளில் பிற மொழி (இந்தி) திணிப்பால் தாய்மொழி தமி ழுக்கு வந்த ஆபத்தை எதிர்த்து தங்கள் இன்னு யிரை ஈந்த மொழித் தீரர்களின் தியா கத்தை போற்றும் வகையில் அடுத்த ஆண்டு முதல், ‘ஜனவரி 25’ தமிழ் மொழித் தியாகிகள் நாளாக கடைபிடிக் கப்படும்.
தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்த கலைஞரின் பெருமையை போற் றும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூன் 3 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் நாள் விழா கொண்டாடப்படும். அந் நாளில் செம்மொழியின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற் றும் பேச்சுப் போட்டி நடத்தி, பரிசினை வழங்க ரூ.1 கோடியே 88 லட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும்.
முனைவர்கள் அழகப்பன், ராம லிங்கம் என்கிற எழில் முதல்வன், சோ. சத்தியசீலன், பாவலர் சா. பாலசுந்தரம், க.ப. அறவாணன், க.த. திருநாவுக்கரசு, இரா. குமரவேலன் ஆகியோரின் நூல் கள் நாட்டுடைமையாக்கப்படும்.
சிறந்த நூல்களை எழுதும் நூலாசிரி யர் மற்றும் நூலை பதிப்பிக்கும் பதிப்ப கங்களுக்கு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
கவிஞர் முடியரசனுக்கு சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவச் சிலை நிறு வப்படும். கலைஞர் பெயரில் புதிய விருது வழங்கப்படும். தில்லியில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கம் புன ரமைக்கப்படும்.
அஞ்சலை அம்மாள் - நாடிமுத்துப் பிள்ளை
சுதந்திரப் போராட்ட தியாகி அஞ் சலை அம்மாள் அவர்களது பிறந்த நாளான ஜூன் ஒன்று கடலூர் மாவட் டத்தில் ஆண்டுதோறும் அரசு விழா வாக கொண்டாடப்படும். தியாகி வை. நாடிமுத்துப் பிள்ளை அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.
ஏபிஜே அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக் டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 சென் னையில் ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாடப்படும்.