tamilnadu

சிறைவாசிகள் வீடியோவில் குடும்பத்தினருடன் பேச வசதி

சென்னை,டிச.13-  தமிழ்நாட்டின் சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ளும் தொலைபேசி அழைப்பு அளவை அதிகரித்து மாநில அரசு உத்த ரவு பிறப்பித்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், தங்களது குடும்ப உறவு களுடன் பேசுவதற்கு அந்தந்த சிறை களில் தொலைபேசி வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில், இதற் கான கால அளவு தற்போது நீட்டிக்கப் பட்டுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்பை மேற்கொள்ளும் வசதி செய்து கொடுக்கப்படவிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டிருக்கும் அரசாணையில், சிறை வாசிகளின் மன அழுத்தத்தை குறைக் கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர் கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலை பேசி வசதிக்கான அளவு அதிகரிக் கப்பட்டுள்ளது.

அதாவது, தொலைபேசி வசதிக் கான (ஆடியோ) கால அளவை 3  நாள்களுக்கு ஒரு முறை அதாவது  மாதத்திற்கு 10 முறை என அதிகரித் திருப்பதாகவும், ஒரு அழைப்புக்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவ தோடு, சிறைச்சாலையில் காணொலி (விடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே, சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்கள் பல்வேறு மாவட்டங்களில் திறக்கப் பட்டு, கைதிகள் திருந்தி வாழ வழி வகை செய்யப்பட்டுள்ளது. சிறைச் சாலைக்கு அருகே இனிப்பகங்கள் திறக்கப்பட்டு, அதில் சிறைக் கைதி களால் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சிறைக்குள் கைதிகளுக்கு சுய தொழில் மற்றும் கைத்தொழில் கற்றுக் கொடுத்து, வெளியே வரும்போது அவர்கள் ஒரு கைத்தொழிலுடன் வெளியே வரவும், சிறைச்சாலையில் வேலை செய்து சம்பாதித்து, அந்த ஊதியத்துடன் வெளியே வரும் போது ஒரு சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.