tamilnadu

img

கூட்டுறவு துறை சார்பில் புதிய செயலி அறிமுகம்

சென்னை, ஆக. 28 - தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத் துறை யின் அறிவிப்புகள் தொடர்பான ஆய் வுக் கூட்டம் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் பெரியகருப்பன், “பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் சேவை களை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப் பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, ‘கூட்டு றவு’ என்ற பெயரில் புதிய செயலி உருவா க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பல்வேறு தகவல் களை பெற முடிவதுடன், கடன் விண்ணப்பத் தை இணைய வழியாக சமர்ப்பிக்  கும் வகையிலும் இந்த செயலியில் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட் டுள்ளன” என்றார்.