சென்னையில் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந் தையடுத்து, 6-ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.