காஞ்சிபுரம், மே 25 - பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம் மையங்களை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆய்வு செய்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி 27ஆம் தேதி தொடங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்எஸ்கேவி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் விடைத் தாள் மதிப்பிடும் பணி தொடங்க உள்ளது. இதனையடுத்து அந்த பள்ளி வளாகங்களை ஆய்வு செய்த ஆட்சியர், மாவட்டத்தில் 52 ஆயிரம் விடைத்தாள்கள் மதிப்பிடும் பணியில் 545 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே விடைத்தாள் திருத்தும் மையத்தின் உள் அனு மதிக்கப்படுவார்கள். மேலும் நகராட்சி மூலம் மையங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் என். சுந்தரமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, காஞ்சி புரம் வட்டாட்சியர் பவானி, நகராட்சி ஆணையர் மகேஸ் வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.