சென்னை, மார்ச் 15 - 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்றும் பாஜகவும் அதன் கூட்டணியும் முற்றிலும் துடைத்தெறியப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் வெள்ளியன்று (மார்ச் 15) மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் மதுரை, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோரை அறிமுகம் செய்து செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
அம்பலப்பட்டு நிற்கும் பாஜக!
ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தை தனது கையில் வைத்திருப்பதால் வரு மான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறைகளை கொண்டு பல நிறுவனங் களையும் உருட்டி, மிரட்டிய பாஜக, நன் கொடை என்ற பெயரில் 6 ஆயிரம் கோடி க்கு மேல் பணத்தை பறித்துள்ளது. பினாமி கம்பெனிகள் என்ற முறையில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றுள்ளது அம்பல மாகிவிட்டது. இதன் மூலம் மக்களிடம் பாஜக அம்பலப்பட்டு நிற்கிறது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்
தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் பாஜக அணியும், ரகசிய உறவு வைத்துள்ள அதிமுக அணியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. இந்தியா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வலுவாக ஒன்றிய அரசில் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சரிடம் வாழ்த்து
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், “எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் இருவரும் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், தோழமைக் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். அதனைத் தொடர்ந்து தொகுதிக்கு சென்று அங்கும் தோழமைக் கட்சித் தலைவர்களை சந்திப்பார்கள். பிறகு, இரண்டொரு நாட்களில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை தொடங்கி விடுவார்கள். தொகுதி முழு மைக்கும் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, பாஜகவை வீழ்த்த வேண்டி யதன் அவசியத்தை விளக்கி வாக்கு கள் கேட்பார்கள்.
பிரச்சாரத்தில் தலைவர்கள்....
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாடு முழுமைக்கும் செல்வார்கள்” என்றார்.
பாஜக தோற்பது உறுதி!
“தேர்தல் பத்திரம் முறையை கொண்டு வந்தது பாஜக. இந்த நடை முறை சரியானது அல்ல என்பதால் ஆரம்பத்திலேயே சிபிஎம் எதிர்த்தது. ஒரு நிறுவனத்திடமும் நிதியை வாங்கவில்லை. ஆனால், சில கட்சிகள் தேர்தல் பத்திரம் முறையில் நிதி வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பாஜகவையும், பிற கட்சிகளையும் சம நிலையில் பார்க்க முடியாது. எஸ்பிஐ வங்கியை, பாஜக பகடைக்காயாக பயன்படுத்துகிறது. தேர்தல் பத்திரம் விவகாரம் பாஜகவுக்கு எதிராக அமையும்” என்றும் அவர் கூறினார்.
வெறும் வாயில் வடை சுட்ட பிரதமர்!
“2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாத பாஜக, இந்த முறையும் துடைத்தெறியப்படும்” என்று கூறிய அவர், “ பாஜக தனது 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு பொதுத்துறையை உருவாக்க வில்லை. 2 கோடி பேருக்கு வேலையும் கிடைக்கவில்லை. விவ சாயிகளுக்கு இரட்டிப்பு மானியம், கடன் தள்ளுபடி என்ற வாக்கு றுதியையும் நிறைவேற்றவில்லை.
ஆனால், விலைவாசி உயர்வு இரட்டிப்பானது. இதுதான் பாஜக வின் சாதனை. இதை சொல்லி தமிழ்நாட்டு மக்களிடம் பாஜக வினர் வாக்கு கேட்பாளர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பி னார்.
தாக்கத்தை ஏற்படுத்தாது
“நாட்டில் பசி, பஞ்சம் இல்லை என்று விளம்பரம் செய்வதால், பசித்தவன் வயிறு நிரம்புமா? விலைவாசி குறைந்து விடுமா? என்றால் முடியாது என்பது மக்களுக்கு தெரியும். இதனால் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். பாஜகவும் அதிமுகவும் தமிழ்நாட்டில் தோற்பது உறுதி.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பிர்லா போட்டியிட்டார். லட்சக் கணக்கில் செலவு செய்தார். அவ ருக்கு போஸ்டர் ஒட்டியவர்கள் எல்லாம் பணக்காரர்கள் ஆனதாக சொல்வார்கள். ஆனால், டெபாசிட் கூட கிடைக்கவில்லை என்பார்கள்.
அடிப்படையான பிரச்ச னைகள்தான் தேர்தல் முடிவை தீர்மானிக்கும். விளம்பரங்கள் தேர்தலை தீர்மானிக்காது” என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
“மகளிர் தினம் வருடாவருடம் வருகிறது. ஒவ்வொரு வருட மும் சிலிண்டர் விலையை குறைத்திருந்தால் இலவசமாக கொடுத்திருக்கலாம். தேர்தல் வருவ தால் சிலிண்டர், பெட்ரோல் விலை யை குறைத்துள்ளார். தேர்தல் முடிந்தால் இரட்டிப்பாக உயர்த்து வார்” என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த சந்திப்பின்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர்கள் கே.ராஜேந்திரன் (மதுரை புறநகர்), ம.கணேசன் (மதுரை மாநகர்) ஆகியோர் உடனிருந்தனர்.
சிபிஎம் வேட்பாளர்கள்
மதுரை - சு. வெங்கடேசன்
திண்டுக்கல் - ஆர். சச்சிதானந்தம்
சென்னை, மார்ச் 15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதிக்கு சு. வெங்கடேசன், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு ஆர். சச்சிதானந்தம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் வெள்ளியன்று (15.03.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சு. வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம் ஆகியோர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., அவர்களையும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான தோழர் ஆர். சச்சிதானந்தம் அவர்களையும், வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.