புதுச்சேரி,செப்.2- புதுவையில் ஆண்டு தோறும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்று மின் கட்டணம் உயர்த் தப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வரும். இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், ஜன நாயக அமைப்புகள் மின் கட்டணத்தை உயர்த்தாமல் ரூ.500 கோடிக்கு மேல் அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கியை வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இருப்பினும் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை மின்சார ஆணையம் கடந்த ஜூன் மாதம் அனுமதியளித்தது. இதையடுத்து, உடனே மின் கட்டண உயர்வை அரசு நடைமுறைக்கு கொண்டுவர கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. அதுவும் ஜூன் 16 ஆம் தேதி முன் தேதியிட்டு மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என புதுவை அரசின் மின்துறை அறிவித்தது. இந்த கட்டண உயர்வால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சி களும் வலியுறுத்தின. ஆனால், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, சிபிஐ எம்.எல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி யில் உள்ள அரசியல் கட்சிகள் சார்பில் புதுச்சேரி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்களன்று (செப்.2) நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை அருகிலிருந்து இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு திமுக அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா, மாநில காங்கி ரஸ் தலைவர் வைத்திலிங்கம், எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், விசிக முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன், சிபிஐ எம்எல் புருஷோத்தமன் ஆகியோர் தலைமை தாங்கினர். போர்கோலம் அண்ணா சாலையில் இருந்து நேரு வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி சென்றபோது தடுப்பு வேலி களை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அந்தப் பகுதி போர் கோலம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.