சென்னை, ஆக. 16 - சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 119 அடி உயரமுள்ள கம்பத்தில் 4-ஆவது முறை யாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
அப்போது, குறைந்த விலையில் மருந்துகள் விற்பனைக்காக ‘முதல்வர் மருந்தகம்’, முன்னாள் ராணுவத்தின ருக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம், தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் உயர்வு, மலைப்பகுதிகளில் பேரிடர் தொடர்பான ஆய்வு உள்ளிட்ட அறிவிப்பு களை வெளியிட்டார்.
‘தகைசால் தமிழர்’ விருதை காங்கிரஸ் முதுபெரும் தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கினார். இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் ப. வீர முத்து வேலுக்கு ‘ஏ.பி.ஜே.அப்துல் கலாம்’ விருதையும், வயநாடு நிலச்சரிவின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணிச்ச லாகச் சென்று மருத்துவ உதவி அளித்த நீலகிரியை சேர்ந்த செவிலியர் ஆ.சபீனா வுக்கு துணிவு, சாகச செயலுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதையும் முதல்வர் வழங்கினார். முன்னதாக திறந்த ஜீப்பில் சென்று காவல்துறை அணிவகுப்பையும் முதல்வர் பார்வையிட்டார்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலை மைச் செயலர் சிவ்தாஸ் மீனா, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அயல்நாடுகளின் தூதரக அதிகாரிகள், தமிழக துறைகளின் செய லாளர்கள், துறை அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.