சென்னை,மார்ச் 12- தமிழக அரசின் சுகா தாரத்துறையுடன் இணைந்து சென்னை ரெயின்போ ரோட்டரி கிளப், உள்பட அனைத்து ரோட்டரி கிளப்க ளும் இணைந்துகொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. சென்னை முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரி கள், மருத்துவமனைகள், கோயில்கள், மசூதிகள், சர்ச்கள், மால்கள், திரை யரங்குகள், பேருந்து நிலை யங்கள், இரயில் நிலையங் கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கொரோனா வைரஸ் பற்றிய அறிவுரைகளையும் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்று ரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ தலைவர் டாக்டர்.தேவ குமார் தெரிவித்தார். வைரஸ் தொற்று பரவா மல் தடுக்க ரோட்டரி உறுப்பி னர்கள் அனைவரும் தமிழ கத்தில், குறிப்பாக சென்னை யில் தீவிரமாக மக்களிடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் அச்சப் பட தேவையில்லை. 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் 80 சத வீதம் பேருக்கு குறைந்த அளவு பாதிப்பு தான் இருக் கும். 15 சதவீதம் பேருக்கு மருத்துவ உதவியுடன் குண மாக்கி விட முடியும் என்று ரோட்டரி 3232 மாவட்ட நிர்வாகி ஜி.சந்திரமோகன் கூறினார். விழாவில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ-வின் செயலாளர் தமிழ்செல்வி, சமுதாய சுகா தாரப்பணியின் இயக்குநர் டாக்டர்.சந்திரகுப்தா உள் ளிட்ட 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.