இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் ஒருவர் மட்டும் தான் நேதாஜி என்ற புகழுக்குரியவர். ஐசிஎஸ் பதவியை உதறி எறிந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்.
சிறைக்கு அஞ்சாதவர். காங்கிரஸ் தலைவராக இடதுசாரிகளின் ஆதரவோடு வெற்றி பெற்றவர். பின்னர் பார்வர்டு பிளாக் எனும் தனி இயக்கம் கண்டவர். அவரது கொள்கை சுதந்திரம், சோசலிசம், மதச்சார்பின்மை. பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய தேசிய ராணுவம் (ஐஎன்ஏ) அமைத்து போரிட்டவர்.
இந்தியாவுக்கு எதிராகப் பேசியதால் ஹிட்லரை எதிர்த்தவர். தேசிய அரசை நிறுவியவர். ஜெய்ஹிந்த் என்று முதலில் முழங்கியவர். முற்போக்குத் திசை வழியில் இந்தியா முன்னேற கனவு கண்டவர்.
அவரது கனவை நனவாக்குவதே அவருக்குச் செலுத்தும் மரியாதை.