பூந்தமல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்துக
திருவள்ளூர், ஏப் 27- பூந்தமல்லி நகராட்சி தமிழ் நாட்டின் தலைநகராங்களில் ஒனறாக உள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ள நகராட்சியாகும். இந்த பூவிருந்தவல்லி தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதி யாக இருந்துள்ளது. சைவமும் வைண வமும் வளர்ந்த பகுதி என்பதற்கான அடையாளங்களாக காலத்தால் முந்திய புகழ்பெற்ற சிவாலயம் மற்றும் வைணவ ஆலயம் இருக்கிறது. அதுமட்டுமன்றி, பிற மதத்தினரையும் ஆதரிக்கும் வண்ணம் பெரிய பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களையும் கொண்டுள்ள நகராட்சியாகும். ஆங்கிலேயர் காலத்தில் சென்னையிலிருந்து ஆற்காட்டிற்கு செல்ல, அதாவது ஆற்காடு நவாப்பின் கோட்டைக்குச் செல்ல பூந்தமல்லி நகர் வழி சாலையை பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்படி பல சிறப்புகள் பெற்ற தாக பூவிருந்தவல்லி நகராட்சி உள்ளது. பூந்தமல்லி நகராட்சி சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகராகும். இதில் பூவிருந்தவல்லி நகராட்சி அதனை ஒட்டிய சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், பாரிவாக்கம், நசரத்பேட்டை, வரதராஜபுரம் ஆகிய ஊராட்சிகள் அடங்கிய பெரும் பகுதியாகும். இந்த பகுதி யில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி களும், குடியிருப்போர் நல சங்கங்க ளும் பலமுறை கோரிக்கை வைத்து ள்ளன. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தெருமுனைக் கூட்டம், துண்டு பிரசுர விநியோகம், ஆர்ப்பாட்டம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் கையொப்பம் பெற்று மனு அளித்தல் என பலகட்டப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியுள்ளது. இவ்வாறு சுமார் 15 ஆண்டுகளாக இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்காக பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பூந்தமல்லி அரு காமையில் உள்ள திருமழிசை நக ராட்சி (திருவள்ளூர் மாவட்டம்), மாங்காடு பேரூராட்சியில் (காஞ்சிபுரம் மாவட்டம்), பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பூவிருந்தவல்லி நகராட்சி அதிக வருவாய் ஈட்டும் காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம் ஊராட்சிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்த தாமதம் ஏன் என தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சட்டமன்றத்தில் நிதி ஒதுக்கி அறிவித்தார். அதற்குப் பின்னர் மு.க. ஸ்டாலின் இன்றைய முதல்வர், துணை முதல்வராக இருந்த போது தற்போதைய பூந்தமல்லி பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பேசும் போதும், பாதாள சாக்கடை திட்டம் உடனடியாக நடை முறைப்படுத்தப்படும் என்று அறி வித்தார். இந்நாள் வரை இத்திட்டம் இப்பகுதிக்கு வரவே இல்லை. இதுவரை வராததற்கு காரணமாக மக்களிடையே உலவிடும் கருத்தா னது, மாநில ஆட்சியில் அதிமுக இருக்கும்போது நகராட்சி திமுக வசமும், மாநில ஆட்சி திமுக வசம் இருக்கும் போது நகராட்சி அதி முக வசமும் இருந்ததால். தான் இந்த திட்டம் பூவிருந்தவல்லியில் நடை முறைப் படுத்தவில்லை என்பது ஆகும். இப்போது ஆட்சியும், பூந்தமல்லி நகராட்சியும் திமுக வசம் வந்துள்ளது. சிபிஎம் வேண்டுகோள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினர் கி.பாரி, பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஏ.பச்சையம்மாள் ஆகியோர் தெரிவிக்கையில், பூந்த மல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டு களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பூந்த மல்லி புறவழிச் சாலை மற்றும் சென்னீராகுப்பம் பகுதியிலும் அதிக அளவில் உறிஞ்சப்படுகின்ற நிலத்தில் நீரை தடுத்து நிறுத்த வேண்டும். பூந்தமல்லி பகுதியில் பெண்கள் கலைக் கல்லூரி நிறுவிட வேண்டும். லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் பூந்தமல்லி மருத்துவமனையை மேம்படுத்தி, விரிவுபடுத்தி, அடிப்படை தேவைகளை நிறை வேற்ற வேண்டும். திருநின்றவூர் பகுதி திருநின்றவூர் நகராட்சி, பெரியார் நகர் பகுதியில் வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு ரயில்வே சுரங்கப் பாதை அமைத்திட வேண்டும். கூடப்பாக்கம் அடுக்கு மாடி குடி யிருப்பு பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். மேலும் புதுப்பிக்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் திருமழிசை சிப்காட் செயல்பட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. - பெ.ரூபன்