tamilnadu

மாணவர் மனதில் நஞ்சை விதைக்கும் ஆளுநர் ரவி

சென்னை, ஆக. 14 - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அலுவலக மானது, ஆகஸ்ட் 9 அன்று சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் சங்கத்திற்கு நேரடியாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

அதில், நாட்டுப் பிரிவினையின் போது நிகழ்ந்த கொடூரத்தை நினைவு கூறும் தினத்தை ஆகஸ்ட் 14 (புதன்கிழமை) அன்று பள்ளிகளில்  கடைபிடிக்க வேண்டும் என்று விஷம வேலையைச் செய்துள்ளது.

மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கம் ஒன்று இருக்கும் போது அம் மாநில அரசை புறக்கணித்து ஆளுநரின் செயலர் இது போன்ற சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்ப அதிகாரம் இல்லை என்று கல்வியாளர் கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மாநில அர சால் அங்கீகரிக்கப்பட்டவை அல்லது மாநில அர சிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) பெற்ற பிறகே சிபிஎஸ்இ அல்லது ஐசிஎஸ்இ உடன் இணைக்கப்படுகின்றன என்பதைக் குறிப் பிட்டுள்ள கல்வியாளர்கள், மாநில அரசை புறந் தள்ளிவிட்டு இதுபோன்ற கடிதத்தை ஆளுநர் அலுவலகம் அனுப்பியதை ஏற்க முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“கல்வி நடவடிக்கை தொடர்பானதாக இருந் தால் பள்ளிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் தமிழக அரசால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அல் லது அது சம்பந்தப்பட்ட கல்வித்துறையின் மூலமே அனுப்பப்பட வேண்டும். ஆளுநரின் செயலர், பள்ளி நிர்வாகங்களின் சங்க அலுவல கப் பொறுப்பாளருக்கு கடிதம் எழுதுவது, சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல’’ என, தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “பள்ளிகளில் பிரிவினை கொடூர நினைவு தினம் அனுசரிக்கப் படுவது இதுவரை நாம் கேள்விப்படாத ஒன்று. நாங்கள் அப்படியொரு நிகழ்வை சந்திக்க வில்லை. ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் மட்டும் அது அனுசரிக்கப்பட்டது. அதை நினைவுகூருவதாக இருந்தாலும், அதுகுறித்த அறிவிப்பில் மாநில அரசை புறக்கணித்திருக்கக் கூடாது. பிரிவினை யின் கொடுமைகளை நினைவு கூரும் நிகழ்ச்சி யில் குழந்தைகளை ஈடுபடுத்துவது மாணவர் களை உளவியல் ரீதியாக பாதித்து வெறுப்பு விதைகளை விதைக்கும். இது போன்ற செயல் கள் குழந்தைகளின் நலனுக்கு எதிரானது” என்று  தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பள்ளிகளில் இதுபோன்ற செயல்களை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும் பொதுப் பள்ளிக் கான மாநில மேடை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையில், ஆளுநர் மாளிகையில் ஒன்றிய தகவல் ஒலிப்பரப்பு அமைச்சகம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பிரிவினை கொடூர தின கண்காட்சியை ஆளுநர் ரவி  பார்வையிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி களின் மாணவ - மாணவிகள் மட்டும் இந்த கண்காட்சியைப் பார்வையிட அனுமதிக்கப் பட்டனர். பொதுமக்கள் அனுமதிக்கப்பட வில்லை.

நாட்டுப் பிரிவினையின் போது இந்துக்களுக் கும் முஸ்லிகளுக்கும் இடையே சில பிரிவினை வாத சக்திகள் திட்டமிட்டு மோதலை ஏற்படுத் தின. அதை இப்போது நினைவுகூர்வது என்பது, முஸ்லிம்களுக்கு எதிரான விஷமத்தை மாண வர்கள் மத்தியில் விதைப்பதாகவே ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைகள் அமையும் என்றும் பலர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.