tamilnadu

மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்த அரசின் உத்தரவில் தலையிட முடியாது நித்யானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை ,செப்.4-  மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்த அரசின் உத்தரவில் தலையிட முடி யாது என்று தெரிவித்து, இது தொடர்பாக நித்யானந்தா தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளு படி செய்துள்ளது. 

நித்யானந்தா சார்பில் தொட ரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம்,  பஞ்சநதிகுளம் ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக மடம், திரு வாரூர் ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம் ஆகிய பல மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தா வை ஏற்கனவே இருந்த மடாதி பதி ஆத்மானந்தா நியமித்திருந் தார். ஆனால் நித்யானந்தா ஆள்  பலம், பண பலம் மூலம் மடங் களை கைப்பற்ற முயற்சிப்ப தால், சம்பந்தப்பட்ட மடங் களுக்கு தக்காரை நியமிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த பேச்சியப்பன், சின்னப்பன் ஆகி யோர் அறநிலையத் துறை ஆணையருக்கு மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங் களில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமன நடவடிக்கை களுக்கு தடை விதிக்கக் கோரி பெண் சீடருக்கு பொது அதி காரம் வழங்கி நித்யானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2017 இல்  தொடரப்பட்ட இந்த வழக்கு செப்டம்பர் 4 அன்று நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மடங்களுக்கு தக்கார்களை நியமிக்க அறநிலைத்துறைக்கு அதிகாரம் உள்ளது. சம்பந்தப் பட்ட மடங்களுக்கு தக்கார்கள் கடந்த 2020 ஆம் ஆண்டே நியமிக்கப்பட்டு விட்டது. எனவே நித்தியானந்தா மனு விசா ரணைக் உகந்தது அல்ல,” என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. வழக்கை தொடர உமாதேவி என்ற சீட ருக்கு பவர் ஆப் அட்டார்னியை நித்யானந்தா கொடுத்துள்ளார். உண்மையிலேயே பவர் ஆப் அட்டார்னியை நித்யானந்தா கொடுத்தாரா என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. ஆகவே, நித்யானந்தா நேரில் ஆஜராகி பவர் ஆப் அட்டார்னி கொடுத் தது உண்மைதான் என தெரி விக்க வேண்டும்” என்று உத்தர விட்டார்.  இதற்கு மனுதாரர் தரப்பு பதிலளிக்கையில், நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப் படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று தெரிவித்தது.

நித்யானந்தா எங்கு உள்ளார்? 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நித்யானந்தா எங்கு  உள்ளார்? நேரிலோ, வீடியோ  கான்ஃபரன்ஸ் மூலமோ ஆஜ ராகலாமே. நித்யானந்தாவை நேரில் பார்க்க வேண்டும், நேரில் ஆஜராக முடியவில்லை என்றால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகலாம். எந்த மூலையில் இருந்தாலும் காணொலியில் நித்யானந்தா ஆஜராகலாம்” என்று தெரி வித்தார். ஆனால் நித்யானந்தா காணொலி மூலம் ஆஜராக இய லாது என மனுதாரர் தெரிவித்த தால் நீதிபதிகள் வழக்கை தள்ளு படி செய்து உத்தரவிட்டனர்.