tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ராமோஜி குழுமத்தின் நிறுவனர் மறைவு!
முதல்வர் இரங்கல்

சென்னை,  ஜூன் 8- ராமோஜி குழு மத்தின் நிறுவனர் ராமோஜி ராவின் மறைவிற்கு, முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தனது  ‘எக்ஸ்’ சமூக வலைத்  தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்  துள்ளார்.

ஓ.பி.எஸ். செயல்பாட்டில் உடன்பாடு இல்லை!
ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகல்

சென்னை, ஜூன் 8- ஓ. பன்னீர் செல்வத்தின் தொண்டர் கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகுவதாக பெங்ளூரு புகழேந்தி, ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் அறி வித்துள்ளனர். 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், “ஓ. பன்னீர்செல்வம் வேறு ஒரு திசையில் செல்கிறார். அதில் எங்க ளுக்கு உடன்பாடு இல்லை. ஓ. பன்னீர்  செல்வத்திற்கும் எங்களுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை.  எல்லோரும் ஒருங்கிணைந்து செல்ல  வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.  வடக்கில் இருந்து வந்து ஆள்வதற்கு நாங்கள் விட மாட்டோம். தேசிய கட்சி கள் 2-வது இடத்திற்கு வரக் கூடாது” என்று தெரிவித்தனர்.

மேலும், அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி. பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவையும் தொடங்கியுள்ள அவர்  கள், “அதிமுக ஒன்றிணைய வேண்டும். எங்களது ஒரே நோக்கம் அதி முக ஒன்றுபட்டு உருவாக்கப்பட வேண்  டும். இதுதொடர்பாக எடப்பாடி பழனி சாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய  மூவரையும் சந்தித்துப் பேசுவோம்” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக அணி முதலிடம்!

ஒன்றில் கூட பாஜக இல்லை

சென்னை, ஜூன் 8- மக்களவைத் தேர்தலில் தமிழ கத்திலுள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றி வர லாறு படைத்துள்ளது. இந்நிலை யில், சட்டமன்ற வாரியாக கட்சிகள்  பெற்ற வாக்குகள் விவரம் தெரிய வந்துள்ளது. 

இதில்,தமிழ்நாட்டில் மொத்த முள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில்  221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித் துள்ளது.

எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்தி வேலூர், அரிய லூர், ஜெயங்கொண்டம், திருக் கோவிலூர்,  உளுந்தூர்பேட்டை ஆகிய 8 சட்டமன்றத் தொகுதி களில் மட்டுமே அதிமுக முதலிடம்  பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி யில் இடம்பெற்ற தேமுதிக திரு மங்கலம், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் முதலிடத் தைப் பிடித்துள்ளது.

பாஜக கூட்டணியில் பெண்ணா கரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் பாமக முதலிடம் வந்துள்ளது. பாஜக ஒரு தொகுதியில் கூட முதலிடம் பெறவில்லை. தற்போது அந்தக் கட்சி வசமுள்ள கோவை தெற்கு,  திருநெல்வேலி, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 தொகுதி களையும் கூட பாஜக-வால் தக்க வைக்க முடியவில்லை.

எனினும் பாஜக கூட்டணி 81  தொகுதிகளில் இரண்டாவது இடம்  வந்துள்ளதாகவும், இதில் சென்னையில் மட்டும் 13 தொகுதி களில் இரண்டாமிடம் பெற்றுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

கருணாநிதி பிறந்த நாள் 
பள்ளிக் குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்!

சென்னை, ஜூன் 8- பொதுவாக கோடை விடு முறைக்குப் பின் ஜூன் ஒன்றாம் தேதி யே பள்ளிகள் திறக்  கப்படும். ஆனால்  இந்த முறை கோடை வெயி லின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததா லும், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்  ணிக்கை ஜூன் 4 அன்று அறிவிக்கப்பட்டு இருந்ததாலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ஜூன் 3 அன்று பள்ளி மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் என்று ஏற்கெ னவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படாததால் அதனை வழங்க முடியாமல் போனது. இந்நிலை யில், ஜூன் 10 அன்று பள்ளிகள் திறக்கும்  நாளில், அனைத்துப் பள்ளிகளிலும் சர்க்க ரைப் பொங்கல் வழங்க வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரம்
ஒன்றிய அரசுக்கு சிபிஐ கண்டனம்

சென்னை, ஜூன் 8- இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழை வுத் தேர்வில் முறைகேடுகளும், ஆள் மாறாட்டமும் நடைபெற்று இருப்பது நாடு  முழுவதும் அதிர்ச்சி அலைகளை உரு வாக்கியுள்ளது. ‘நீட்’ தேர்வு மீதான நம்ப கத்தன்மை கேள்விக் குறியதாக மாறி வருகிறது. எனவே நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நேர்மையான, நடுநிலையான விசாரணைக்கு உத்தர விட வேண்டும். தவறு செய்தோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும்  மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்  டும். நீட்டிலிருந்து விலக்குக் கோரும்  தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஒன் றிய அரசு பெற்றுத்தர வேண்டும்” என்று இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

“தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டி லுள்ள மருத்துவ இடங்களுக்கு நீட்டிலி ருந்து விலக்கு அளிக்கத் தவறும் ஒன்றிய  அரசின் மாநில விரோதப் போக்கு கடும்  கண்டனத்திற்குரியது” என்றும் குறிப்பிட்  டுள்ளார்.

ரயில்வே, வங்கிப் பணிகளுக்கு  கட்டணமில்லா உறைவிட பயிற்சி

தமிழக அரசு தகவல்

சென்னை, ஜூன் 8- ‘நான் முதல்வன்’ திட்டத்  தின் கீழ் ‘போட்டித் தேர்வு பிரிவு’  அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னால் தொடங்கி வைக்கப்பட் டது. இதன் மூலம் ஒன்றிய அரசு  வேலைவாய்ப்புக்கான போட்  டித் தேர்வுகளை எளிதாக அணு குவதற்கு பல பயிற்சித் திட்டங் களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை யில், மத்திய பணியாளர் தேர்வா ணையம், ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதி கம் வெற்றி பெற வேண்டும் என்ற  நோக்கில், 1,000 மாணவர் களுக்கு உண்டு - உறைவிட வச தியோடு கூடிய தரமான 6 மாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த உறைவிடப் பயிற்சி யில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் ஜூலை 14 அன்று நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in  என்ற இணையதளத்தில் சென்று ஜூன் 8 முதல் 23 வரை  விண்ணப்பிக்கலாம் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்)  ஜூலை 9 அன்று வெளியிடப்பட உள்ளது.

பொறியியல் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூன் 8- அண்ணா பல்கலைக்கழகத்  தின் கீழ் இயங்கும் பொறியியல்  கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய தொழில்நுட்ப படிப்பு களில் நேரடி இரண்டாம் ஆண்  டுக்கான  மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை தொடங்குகிறது. பாலிடெக்னிக் மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாண வர்கள், www.tnlea.com என்ற  இணையதளத்தின் வாயிலாக  நேரடி 2-ஆம் ஆண்டு பொறி யியல் படிப்புக்கு அடுத்த மாதம் (ஜூலை) 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.