tamilnadu

img

வார்டுகள் மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டத்தை முறைப்படுத்தி நடத்துக: சிபிஎம்

கள்ளக்குறிச்சி. பிப், 25- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்புறம்  மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புக ளுக்கான வார்டு மறுவரையறை கருத்து கேட்புக் கூட்டத்தை முறைப்படுத்தி மீண்டும் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மறுவரையறை ஆணையச் சட்டம் 2017, ஆணைய ஒழுங்குமுறை விதி கள் 2017இன்படி 2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின் அடிப்படையாகக் கொண்டு தயார்  செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1 நகராட்சி வார்டுகள், 7 பேரூராட்சி களின் வார்டுகள், 9 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட  ஊராட்சி வார்டு ஆகியவற்றின் மறுவரை யறை வரைவு குறித்து பொதுமக்கள் மற்றும்  அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்பு கூட்டம்  மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் செவ்வா யன்று (பிப். 25) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவ லர் சங்கீதா தலைமை தாங்கினார். ஊராட்சி கள் இணை இயக்குனர் ரத்னமாலா, விழுப்பு ரம் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன் மற்றும் துறை அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச்  செயலாளர் டி.ஏழுமலை, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஏ.வி.சரவணன், காங்கி ரஸ் கட்சி சார்பில் ஜெய்கணேஷ், திமுக சார்  பில் அங்கயற்கண்ணி, சட்டமன்ற உறுப்பினர்  உதயசூரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட பட்டியல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகளுக்கு வழங்கப்படவில்லை. கூட்டம் தொடர்பாக முக்கிய அரசியல் கட்சி களுக்கு தகவல் அளிக்கவில்லை. மறுவரை யறை தொடர்பாக அரசியல் கட்சியினர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும், சந்தே கங்களுக்கும் முறையான பதில் அளிக்கப்  படவில்லை. எனவே இதை இறுதிப்படுத்தா மல் உரிய கால அவகாசம் அளித்து மீண்டும்  முறையாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர் டி. ஏழுமலை உள்ளிட்ட அனைத்து அரசியல்  கட்சியினரும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.  அரசு தரப்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்து  பேசி பதில் அளிப்பதாக தெரிவித்தனர்.