tamilnadu

img

பொறியியல் படிப்புக்கு 2.49 லட்சம் விண்ணப்பம்

சென்னை, ஜூன் 7- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்த நிலையில், இதுவரை 1.78 லட்சம் பேர் சான்றிதழ்களைப் பதி வேற்றம் செய்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் அரசு  ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற் கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6 அன்று தொடங்கியது. முதல் நாளில் இருந்தே மாணவர்கள் போட்டிபோட்டு விண்ணப்பித்து வந்தனர். ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்வதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை (ஜூன் 6) முடி வடைந்தது.

இந்நிலையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இறுதி விவரங் களை தமிழ்நாடு பொறியியல் மாண வர் சேர்க்கை செயலாளர் புரு ஷோத்தமன் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) வெளியிட்டார்.

அதன்படி, இந்த ஆண்டு பொறி யியல் படிப்புக்கு 2 லட்சத்து 49 ஆயி ரத்து 918 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர்  விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி யுள்ளனர். ஒரு லட்சத்து 78 ஆயிரத்து  180 பேர் சான்றிதழ்களை பதிவேற் றம் செய்துள்ளனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 12 வரை  அவகாசம் உள்ளது.

கடந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 பேர் பதிவு செய்திருந்தனர். இறு தியாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை முழுமை  செய்தவர்கள் ஒரு லட்சத்து 87  ஆயிரத்து 847 பேர். கடந்த ஆண்டை  விட இந்த ஆண்டு பொறியியல் படி ப்புக்கு அதிகம் பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 13 ரேண்டம் வெளியீடு

இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாண வர்களுக்கு ஜூன் 12 அன்று ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் ஜூலை 10 அன்று வெளியிடப்பட உள்ளது. விருப்ப மான கல்லூரியை தேர்வு செய்வதற் கான இணையவழிக் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
 

;