குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
சென்னை, மே 6- குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, குடிநீர் சுத்திகரிப்பு முறைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். சுத்தம் செய்யப்படாத கேன்களை பயன்படுத்த கூடாது. ஒரு கேன் சுழற்சி முறையில் அதிகபட்சம் 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழுப்பு நிற அல்லது அடையாளமின்றி வரும் கேன்களில் குடிநீர் நிரப்பி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் ரெய்டு! சென்னை, மே 6- சென்னை கே.கே நகர், சாலிகிராமம், அசோக் நகர், கோயம்பேடு, ஆர் ஏ புரம், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையின் செவ்வாயன்று (மே 6) சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் துறை இயக்கத்தின் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பாண்டியன் தொடர்பாக 18 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். எனவே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை அடிப்படையாக வைத்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சட்டவிரோத பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சரும பாதுகாப்பு நிலையம் திறப்பு சென்னை, மே 6– சரும பாதுகாப்புக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் பயோ ரிவைவ், சென்னை போயஸ் கார்டனில் தனது கிளையை திறந்துள்ளது. தோல் தொடர்பான மேம்பட்ட நோயறிதல், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு ஆகியவை இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும். “பயோ ரிவைவ் என்பது ஆரோக்கியம் ஒரு ஆடம்பரமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்று நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள மருத்துவர் டாக்டர் ஐஸ்வர்யா செல்வராஜ் கூறினார். இங்கு லேசரை கொண்டு சருமத்தை பிரகாசமாக்குதல் மற்றும் புத்துணர்ச்சியூட்டுதல், வலியற்ற லேசர் முடி அகற்றுதல்ஹைப்பர்பரிக் ஆக்ஸிஜன் தெரபி, கம்ப்ரஷன் தெரபி மற்றும் பல சிகிச்சைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் சர்வதேச மருத்தவர்கள் சங்கத்தால் அங்கீரிக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.