திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் நடத்திய மனு கொடுக்கும் போராட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் எஸ். பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம். பிரகலாதன், முருகப்பன், சிபிஎம் தலைவர்கள் சி. அப்பாசாமி, பி. கண்ணன், வெ.மன்னார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.