tamilnadu

img

விவசாயிகள் புகார் எதிரோலி 2 நாளில் மின் மாற்றி அமைக்க வாரியம் உறுதி

விவசாயிகள் புகார் எதிரோலி 2 நாளில் மின் மாற்றி அமைக்க வாரியம் உறுதி

மேல்மலையனூர் அருகே பொற்குணம் கிராமத்தில் பழுதான மின் மாற்றியை இரண்டு நாட்களில் மாற்றி தருவதாக மின் துறை உறுதியளித்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூர் வட்டம்,பொற்குணம் கிராமத்தில் உள்ள தேவனூர் மின் வாரியத்திற்குட்பட்ட  எஸ்.எஸ்-3 மின்மாற்றி கடந்த 2-மாதத்திற்கு முன்பு பழுதடைந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து. தற்காலி கமாக, மின்சார வழங்கினர். ஆனால், ஒட்டுமொத்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்க முடியவில்லை. குறைந்த மின்ன ழுத்தம் காரணமாக, குடிநீர் தேவை கூட மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.மேலும் குறைந்த மின்னழுத்த மின்சாரத்தின் காரணமாக விவசாயிகள் விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. இதையடுத்து, சிபிஎம் மேல்மலையனூர் வட்டச் செய லாளர் ஹரி ஹர குமார் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன், வெங்கடபதி, வழக்கறிஞர் அய்யனார் உள்ளிட்டோர் மின்துறை அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, விரைவாக நடவடிக்கை எடுத்து இரண்டு நாட்களில் பொற்குணம் கிராம மின்மாற்றியை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.