சென்னை, ஆக. 31 - தமிழகத்தில் இதுவரை சென்னை சென்ட்ரலிலிருந்து - மைசூரு, கோயம்புத்தூர், விஜய வாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூரிலிருந்து திரு நெல்வேலிக்கும், கோயம்புத் தூரிலிருந்து பெங்களூருவுக்கு மாக மொத்தம் 5 வழித்தடங்களில் ‘வந்தே பாரத் ரயில்கள்’ இயக் கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதிதாக சென்னை எழும்பூர் - நாகர்கோ வில், மதுரை - பெங்களூரு இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று காணொளி மூலம் துவக்கி வைத்தார்.
இந்த 2 ரயில்களும் செப். 2 முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள் ளது. எழும்பூர் - நாகர்கோவில் ரயில் (எண் 20627)காலை 5 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண் 20628) நாகர்கோவிலி லிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.
மதுரை - பெங்களூரு ரயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண் 20672) பெங்களூரிலி ருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும்.
எழும்பூர் - நாகர்கோவில் ரயில் கட்டணமாக நபர் ஒருவருக்கு (ஏசி சேர் கார்)ரூ. 1,760-ம், சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்ஸிகி யூட்டிவ் சேர் கார்) நபர் ஒருவருக்கு ரூ. 3,240-ம் கட்டணமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்க மாக ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ.1,735, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கைக்கு ரூ. 3,220 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ. 1,575-ம், சொகுசுப் பெட்டி இருக்கைக்கு ரூ. 2,865-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. மறுமார்க்கமாக ஏசி சேர் கார் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்ட ணங்களும் உள்ளடங்கும்.
இதையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச் சர் எல். முருகன், தமிழ்நாடு போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.