சென்னை, டிச. 4 - திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு தொண்டமானூர் இடையே 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒரு மேம்பாலத்தை, 5 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.
இந்நிலையில், பெஞ்சால் புயலால் தென்பெண்ணை ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அகரம்பள்ளிப்பட்டு தொண்டமானூர் இடையே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் நேற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. திறக்கப்பட்டு ஒரு சில மாதங்களே யான பாலம், இப்படி நீரில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது சமூகவலைதள பக்கத்தில் கண்டனம் பதிவிட்டிருந் தார்.
இந்நிலையில், திமுக ஆட்சியில் சாலைகள், பாலங்கள் தரம் வாய்ந்த தாக கட்டப்பட்டு வருகின்றன. ஒவ் வொரு நிலையிலும் தரக்கட்டுப் பாட்டுப் பொறியாளர்கள் தரத்தை சோதிக்கின்றனர்.
ஆனால், முதலமை ச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது, 7 பாலங்கள் இடிந்து விழுந் தன. அப்போது, நெடுஞ்சாலைத் துறையையும் பொறுப்பில் வைத்திருந்த எடப்பாடியாருக்கு தற்போதைய ஆட்சியை குறை கூற எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று அமைச்சர் எ.வ. வேலு பதிவிட்டுள்ளார்.