சென்னை, மே 11 - தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து, முக்கிய அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செய லாளர் சிவ்தாஸ் மீனா திடீர் ஆலோ சனை நடத்தினார்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துவரும் நிலையில், அத னைக் கட்டுப்படுத்த பல்வேறு நட வடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகை யில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சனிக்கிழமை யன்று அவசர ஆலோசனைக் கூட் டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர், சட்ட ஒழுங்கு பிரிவு ஏடிஜிபி உள்ளிட்ட பலரும் ஆலோசனையில் பங்கேற்றனர். சில இடங்களில் கஞ்சா உள் ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் பான செய்திகளும் அது தொடர் பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவை குறித் தெல்லாம் இந்த அவசர ஆலோச னைக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக தெரிகிறது.
மேலும், ஆலோசனைக் கூட்டத்தில் எடுக் கப்படும் முடிவுகள் அடிப்படை யில் காவல்துறையின் நடவடிக்கை கள் குறித்த அறிவிப்புகளும் விரை வில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.