tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சென்னை,ஜூன் 6- தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வரு வதையே பார்க்க முடி கிறது..

இந்நிலையில், சென் னையில் வியாழனன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600  அதிரடியாக உயர்ந்துள் ளது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம்  ரூ.6,800-க்கும் சவரன் ரூ.54,400-க்கும் விற்பனை யாகிறது.

அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்  பயிற்சியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

சென்னை, ஜூன் 6- அரசு மற்றும் தனியார் தொழிற்நிலையங்களின் அரசு  ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் தனியார் தொழிற்நிலையங்களின் அரசு ஒதுக் கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர்ந்திட www.skilltraining.tn.gov.in<http://www.skilltraining.tn.gov.in>  என்ற இணையதளம் வாயிலாக பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்கள் தெரிந்து கொள்ள www.skilltraining.tn.gov.in<http://www.skilltraining.tn.gov.in>என்ற இணையதளத்தினை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது, தொழிற் பயிற்சி  நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகம். முடுகாலணி, சீருடை, சீருடைக்கான தையற் கூலி, வரைபடகருவிகள, ஆடவர் தங்கும் விடுதி மற்றும் இலவச பேருந்து பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது,

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், எண் 55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 021என்ற விலாசத்திலும் 044-25201163 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் வாலிபர் பலி

சென்னை, ஜூன் 6- சென்னை வடபழனியில் குப்பை லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலியானார். சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்  (26). அவரது நண்பர் வெற்றி (24). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் அசோக்  பில்லரில் இருந்து 100 அடி சாலையில் வடபழனி நோக்கி  சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சந்தோஷ்  ஓட்டினார்.

வடபழனி மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் போது,  முன்னால் சென்று கொண்டிருந்த சென்னை மாநகராட்சியில்  குப்பை அள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் லாரி மீது மோட்டார்  சைக்கிள் மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றியை அங்கிருந்த வர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து பாண்டி பஜார்  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

 

;