tamilnadu

img

வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்...

சென்னை:
 தில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தமிழ்நாட்டிலும் விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும், அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரிக்கும் வகையிலும், மாநிலம் முழுவதும் திமுகவினர் சனிக்கிழமையன்று(டிச.5) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட் டத்தில் தயாநிதி மாறன், வட கலாநிதி வீராசாமி, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், சேகர்பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.இதேபோன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

;