tamilnadu

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகள்! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, ஆக. 9 - சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்கு முறை விதிகளை கொண்டுவர வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாகப் பேசி யது, கஞ்சா கடத்தியது உட்பட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, மாநிலம் முழுவதும் 16 வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டன.

குண்டர் தடுப்புச் சட்டத்திலும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான  குண்டர் சட்டத்தை எதிர்த்து, அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நீதிபதிகள் எஸ்.எம்.  சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு, வெள்ளிக்கிழமை (ஆக.9) தீர்ப்பு வழங்கி யது.

அப்போது, “சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம். அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஊட கங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல் பாடுகள் குறித்த விவாதங்கள் அதி கரித்துள்ளது ஆரோக்கியமானது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மக்களின் குறைகளை தெரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்கக் கூடாது. 78-ஆவது சுதந்திர தினத்தை கொண்டா டும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பி னர். மேலும், சங்கர் மீதான குண்டர் சட்டத் தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.