காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா வயலூர் மற்றும் பெருநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் நரிக்குறவ குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், வயலூரில் நரிக் குறவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (நவ.21) உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நில உரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ருக்குமாங்கதன் தலைமை தாங்கினார்.