tamilnadu

img

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜூன் 17-  தாம்பரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இருளர் மக்களுக்கு கால தாமதமின்றி உடனே சாதிச் சான்று வழங்கக் கோரியும், விசா ரணை என்ற பெயரில் மொழி, கலாச்சாரத்தை  கொச்சைப்படுத்தும் அதிகாரிகளை கண்டித் தும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் திங்களன்று(ஜூன்17) காஞ்சி புரம் மாவட்டத் தலைவர் அழகேசன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்  கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், விவசாய சங்க மாவட்டச் செய லாளர் எம்.சந்திரன், சிபிஎம் பகுதி செயலா ளர் பிரபாகரன், மலை சங்க காஞ்சி மாவட்டச்  செயலாளர் ராமு, இருளர் கூட்டு அமைப் பின் சொர்ணலதா, சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றினார்கள். சுப்பிரமணி நன்றி கூறினார்.