சென்னை, ஆக. 10- மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கி களை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ யை அரசு உருவாக்க வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக.10) சென் னையில் தர்ணா நடைபெற்றது.
அரசாணைப்படி அரசு நிதியின் ஒரு பகுதியை கூட்டுறவு வங்கிக ளில் வைப்பு வைக்க வேண்டும், நகர கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும், நகர வங்கி ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மாநில கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆணையினை விரைந்து வெளியிட வேண்டும்; ஊதிய உயர்வு மற்றும் படி (அலவன்ஸ்) நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், விதிகளை மீறி நகர வங்கிகளில் மென்பொருள் புகுத்திய அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலி யுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த தர்ணா நடைபெற்றது.
சம்மேளனத் தலைவர் தி. தமி ழரசு தலைமையில் நடைபெற்ற தர்ணாவை இந்திய வங்கி ஊழியர் சம்மேளன (பெப்சி) முன்னாள் செயலாளர் கே.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பெபி மாநிலத் தலைவர் எஸ். சுனில்குமார், துணைத் தலைவர் சி.பி. கிருஷ் ணன், கூட்டுறவு வங்கி ஊழியர் சம் மேளன பொதுச் செயலாளர் இ. சர்வேசன் உள்ளிட்டோர் பேசினர்.