தட்சிண திருப்பதி மலைவாழ் மக்களுக்கு
மீண்டும் பட்டா கிடைத்தது
சூளகிரி வட்டம் காமன் தொட்டி அருகில் தட்சிண திருப்பதியில் 11 ஆண்டு களுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறை யால் பட்டியலின, மலைவாழ் மக்க ளுக்கு 26 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அங்கு மேலும் 16 குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்து வரு கின்றனர். 26 குடும்பங்களுக்கு மட்டும் அப்போதே பட்டாக்கள் தரப்பட்டது. 5 ஆண்டு களுக்கு முன்பு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பட்டாக்களை புதிதாக மாற்றி தருவதாக கூறி வாங்கிச் சென்று இதுவரை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.பட்டாக்கள் இல்லாததால் அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை மேலும் சீர்படுத்திக் கொள்ள முடியாத இக்கட்டான நிலை நிலவுகிறது. மக்களிடம் வாங்கிச் சென்ற 26 பட்டாக்களை திருப்பித் தரக் கோரியும், அப்பகுதியில் தாங்களே வீடு கட்டி வசித்து வரும் 16 குடும்பங்களுக்கும் பட்டாக்கள் புதிதாக வழங்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு முன்பு 42 வீடுகளுக்கும் பட்டாக்கள் வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. அப்போது வட்டாட்சியர் அங்கேயே 2 பட்டாக்களை வழங்கி மீதமுள்ள பட்டாக்களை 2 மாதத்திற்குள் வழங்கி விடுவதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முயற்சி மேற்கொண்டனர். அதன் விளைவாக மீதம் 24 வீடுகளுக்கும் புதிய பட்டாக்கள் மீண்டும் வழங்கப்பட்டது. அப்போது மக்கள் கட்டி குடியிருக்கும் மீதம் 16 வீடுகளுக்கும் அரசின் உத்தரவுப்படி உடனடியாக பட்டாக்கள் வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க முயற்சியால் 26 பட்டாக்கள் புதிதாக திரும்ப கிடைத்ததற்கு தட்சிண திருப்பதி மக்கள் நன்றி கூறினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.முரு கேஷ் வட்டத் துணைத் தலைவர் ராமச் சந்திரா,வட்டத் தலைவர் அஹ்மத் பாஷா, செயலாளர் டி.முரளி, பொருளாளர் நாராயணப்பா உடன் இருந்தனர்.