மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இதில், மாநாட்டு பிரதிநிதிகளுக்கான உணவுச் செலவில் ஒரு பகுதியை (ரூ. 3 லட்சம்) கட்சியின் சேலம் மேற்கு மாநகர் ஜங்சன் கிளைச் செயலாளர் ஏ. முகமது அலி ஏற்றுக்கொண்டுள்ளார். அதில், முன்தொகையாக ரூ. 1.50 லட்சத்தை, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், வரவேற்புக்குழு தலைவர் வி. ராமமூர்த்தி ஆகியோரிடம் வழங்கினார். இந்நிகழ்வில், கட்சியின் சேலம் மாவட்ட மூத்தத் தலைவர்கள் ஆர். வெங்கடபதி, பி. சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.